தேமுதிக - ம.ந.கூட்டணி நாளை முதல் பிரச்சாரம்: 5 கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்

By செய்திப்பிரிவு

தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இணைந்து நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக சந்திக்கிறது. இதன்மூலம், தமிழகத்தில் பல மாதங்களாக நிலவி வந்த கூட்டணி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிக 2 கட்டமாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளிலும் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசுவார் என்றும் தேமுதிக தலைமைக் கழகம் நேற்று அறிவித்தது.

அதன்படி, முதல் கூட்டம் நெல்லையில் நாளை (25-ம் தேதி) நடக்கிறது. 26-ம் தேதி - தூத்துக்குடி 27 - மதுரை, 28 தஞ்சாவூர், 29- திருச்சி, 30 - திண்டுக்கல், 31 - கோவை, ஏப்ரல் 1 - திருப்பூர், 2 - ஈரோடு, 3 - சேலம், 4 - வேலூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்