தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இணைந்து நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக சந்திக்கிறது. இதன்மூலம், தமிழகத்தில் பல மாதங்களாக நிலவி வந்த கூட்டணி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக 2 கட்டமாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகளிலும் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசுவார் என்றும் தேமுதிக தலைமைக் கழகம் நேற்று அறிவித்தது.
அதன்படி, முதல் கூட்டம் நெல்லையில் நாளை (25-ம் தேதி) நடக்கிறது. 26-ம் தேதி - தூத்துக்குடி 27 - மதுரை, 28 தஞ்சாவூர், 29- திருச்சி, 30 - திண்டுக்கல், 31 - கோவை, ஏப்ரல் 1 - திருப்பூர், 2 - ஈரோடு, 3 - சேலம், 4 - வேலூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
12 hours ago