ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது: வணிகர்கள் பிரச்சாரத்துக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பு தொடக்க விழா பழம்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, ‘தமிழகத்தில் மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைத்து வணிகர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதற்காக எந்த வேட்பாளரிடமும் பணம் வாங்கக்கூடாது. அதனை பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது குறித்த விளம்பரங்களை மக்களின் பார்வைக்கு வைக்கலாம். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வணிகர்கள் பணம் கொடுக்க வேண்டாம். இதுகுறித்து பொதுமக்களிடம் வணிகர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்