புதுச்சேரியில் 92 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.26 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(செப். 25) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 5,128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-65, காரைக்கால்- 12, ஏனாம்-4, மாஹே- 11 பேர் என மொத்தம் 92 பேருக்கு (1.79சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 120 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 812 பேரும் என 932 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 82 வயது முதியவர், காரைக்கால் டிஆர் பட்டினத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,836 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது. புதிதாக 114 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 244 (97.80 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 60 ஆயிரத்து 336 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

14 mins ago

உலகம்

21 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்