புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (செப்.12) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,032 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இவற்றில் புதுச்சேரியில் 60, காரைக்காலில் 26, ஏனாமில் 1, மாஹேவில் 13 பேர் என மொத்தம் 100 பேருக்கு (1.99 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 178 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 752 பேரும் என 930 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் காரைக்காலைச் சேர்ந்த 2 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,823 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. புதிதாக 82 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 22 (97.79 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 61 ஆயிரத்து 521 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
சினிமா
29 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
48 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago