கும்பகோணம் மாநகராட்சியுடன் சுவாமிமலை பேரூராட்சியை இணைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழ்ந்து வரும் சுவாமிமலை பேரூராட்சி, தற்போது தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது, கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய மாநகராட்சியோடு சுவாமிமலை பேரூராட்சியை இணைக்க இருக்கும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து சுவாமிமலை பேரூராட்சியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, சுவாமிமலை வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், இன்று (ஆக. 29) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுவாமிமலையில் அடையாள கடையடைப்பு நடத்துவது என வியாபாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, சுவாமிமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுவாமிமலை கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவாமிமலையில் வர்த்தக சங்கத்தினர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
2 mins ago
க்ரைம்
6 mins ago
இந்தியா
4 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
50 mins ago
தமிழகம்
2 hours ago