சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஆக. 27) வெளியிட்ட அறிவிப்பில், "வெப்பச் சலனம் காரணமாக, ஆக. 27 அன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்" எனத் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று (ஆக. 27) மாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், மயிலாப்பூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இன்னும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
5 hours ago
வலைஞர் பக்கம்
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
ஜோதிடம்
6 hours ago