சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில், விளாத்திகுளம் திமுகஉறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் பேசும்போது, ‘‘முன்னாள்முதல்வர் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில், 3 ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து,தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, அதுகுறித்து விவாதிக்க முடியாது. இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
பேரவை துணைத் தலைவர்கு.பிச்சாண்டி: அவர் மேலோட்டமாக பேசியதால், நீக்குவதற்கு அவசியம் இல்லை.
அவை முன்னவர் துரைமுருகன்: வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மேலோட்டமாக பேசலாம்.
ஓ.பன்னீர்செல்வம்: மருத்துவமனை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது. எனவே தான் அதை நீக்கக் கோரினேன்.
கு.பிச்சாண்டி: அவர் பேசியதும், நீங்கள் பேசியதும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
கல்வி
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
10 hours ago