சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வரை இயக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள், ரூ.256 கோடி செலவில் கடந்த 2016-ம்ஆண்டு முதல் 3 கட்டமாக நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி வரை புதிய பாதை அமைக்கப்பட்டு, தற்போது இந்த தடத்தில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையே 3-வது புதிய பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இதற்கிடையே, தாம்பரம் - கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு 3-வது பாதைக்கு ரயில் நிலையங்கள், சிக்னல்கள் ஆகியவற்றை இணைத்து வண்டலூர் ரயில் நிலையத்தில் கணினி தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவு செய்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் பிறகு, ஓரிரு மாதங்களில் இதில் ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
49 mins ago
விளையாட்டு
44 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago