புதுச்சேரியில் 90 பேருக்கு கரோனா; உயிரிழப்பு இல்லை

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.1) வெளியிட்ட தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 4,911 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 78 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என 90(1.83 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 179 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 803 பேரும் என மொத்தமாக 982 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,795 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 228 (97.71 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 15 லட்சத்து 99 ஆயிரத்து 224 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 12 லட்சத்து 86 ஆயிரத்து 67 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 9 ஆயிரத்து 529 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்