சென்னை - புதுச்சேரிக்கு 200 அரசுப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று முதல் 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, புதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து பேருந்துசேவை புதுச்சேரிக்கு மீண்டும்தொடங்கப்படுகிறது. இதுவரையில் தமிழக எல்லைவரையில் இயக்கப்பட்ட பேருந்துகள் இனி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும். அரசு போக்குவரத்து கழகங்கள்சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து மொத்தம் 2,250பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு அரசு பேருந்துகளின் சேவை தொடங்காததால், சுமார் 250 பேருந்துகளின் சேவை இன்னும் தொடங்கவில்லை.

புதுச்சேரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், கோயம்பேட் டில் இருந்து இன்று முதல் 200 அரசு பேருந்துகளை இயக்கவுள்ளோம். இருப்பினும், பயணிகள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம்’’ என்றனர்.

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

13 mins ago

க்ரைம்

17 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்