செம்பியத்தில் ரூ.1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பா?- ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை, செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெரம்பூரை அடுத்த செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை முறைகேடு செய்து சிலர் பட்டா பெற்றுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்தார்.

மேலும், அந்த நிலத்தின் பேரில் சிண்டிகேட் வங்கியில் சுமார் 9 கோடி ரூபாய் வரை கடன் பெற்று அதனைச் செலுத்தாததால் தற்போது அந்த நிலம் ஏலத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அரசுடைமையாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம் மற்றும் நீர்நிலைப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

20 mins ago

வாழ்வியல்

44 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

18 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்