மனிதக்கழிவு அள்ளும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் அதிருப்தி

By கி.மகாராஜன்

விருதுநகர், மதுரை மாவட்டத்தில் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கேட்டு 2017-ல் தாக்கல் செய்த வழக்கில் இரு மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரை வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் எவ்வித உபகரணங்கள் இல்லாமல் மனிதகழிவுகளை அகற்றிவருகின்றனர். உச்ச நீதிமன்றம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அடையாளம்கண்டு, அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம், நிதி உதவி, குழந்தைகளுக்கு கல்வி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என 2014-ல் உத்தரவிட்டது.

இந்த வசதிகளை பெற மனித கழிவுகளை அகற்றுபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் 169 பேர் மனிதகழிவுகளை அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அடையாள அட்்டை வழங்கவில்லை.

எனவே, அடையாளம் காணப்பட்டுள்ள மனிதக்கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கைகளால் மனிதக்கழிவுகளை அகற்றுவோர்களை கணக்கெடுக்குவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.

பின்னர், தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் பலர் உயிரிழந்து வருவதை தீவிரமாக அணுக வேண்டும். இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கு 2017-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என 2018-ல் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஜூலை 7-க்குள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயலர், நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர், மதுரை, விருதுநகர் ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

32 mins ago

க்ரைம்

36 mins ago

இந்தியா

34 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்