இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 86 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, 50-க்கும்மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே நேற்று காலை மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 11 நாட்டுப் படகுகளை சிறைபிடித்து அதில் இருந்த 86 மீனவர்களையும் கைது செய்தனர்.
பின்னர் இந்தியாவில் தற்போது கரோனா 2-வது அலை அதிகரித்து வருவதால், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனை விதித்து 86 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகுகளுடன் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
47 mins ago
விளையாட்டு
42 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago