மீன்பிடி தடைகாலம் தொடங்கி யதையடுத்து ராமேசுவரம் கடலோரப் பகுதியில் விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இன ப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 15-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்தி லிருந்து எஸ்.பி.பட்டிணம் வரையிலும், பாக் ஜலசந்தி கடலிலும், தனுஷ்கோடியிலிருந்து கன்னிராஜபுரம் வரையிலும் மன்னார் வளைகுடா கடலிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப் படகுகளில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு, படகுகள் கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் இன்ஜின் பழுது நீக்குதல் மற்றும் மராமத்து உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளை மீனவர்கள் மேற் கொண்டு வருகின்றனர். மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை மராமத்து செய்ய கரைக்கு ஏற்றுவது வழக்கம். இதற்கு மீனவர்கள் முன்பு கட்டைகளை பயன்படுத்தி வந்தனர். பாம்பனில் தற்போது வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் மீன்பிடி விசைப்படகுகளை கரையில் ஏற்ற பலூன்களை பயன்படுத்தி படகை கரைக்கு கொண்டு வருகின்றனர்.
பழைய முறைப்படி கட்டை களை பயன்படுத்தி படகை கரையில் ஏற்றினால், அதிக தொழி லாளர்களும் உடல் உழைப்பும் தேவைப்பட்டது. பலூன்கள் மூலம் மீன்பிடி விசைப் படகை கடலில் இருந்து கரையில் ஏற்ற கரைக்கு அருகே படகு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் பலூன்களை வைத்து காற்று நிரப்பி படகு கரையேற்றப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
48 mins ago
ஜோதிடம்
53 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago