‘‘கடவுள் தண்டிக்கிறாரோ, இல்லையோ, பழனிசாமியை மக்கள் தண்டிப்பார்கள்’’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் குணசேகரன், மாங்குடியை ஆதரித்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பழனிசாமி தோல்வி பயம் காரணமாக ஏதோ உளறி வருகிறார். பொய்களை அவிழ்த்துவிட்டு வருகிறார். ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை மனதில் வைத்து தான் வாரிசு அரசியல் குறித்து பழனிசாமி பேசி வருகிறார்.
வாரிசு அரசியல் குறித்து பேச அதிமுகவுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் மரணத்துக்கு பிறகு அவரின் மனைவி ஜானகி முதல் வரானார். எம்ஜிஆருடன் நடித்த ஜெயலலிதா முதல்வரானார். ஜெயலலிதா தோழி சசிகலா பதவிக்கு வந்தார். அவரின் காலில் விழுந்து கும்பிட்ட பழனி சாமி முதல்வரானார். ஜெய லலிதா மரணத்துக்கு திமுக காரணம் என்று முதல்வர் பேசி வருகிறார். விசாரணை ஆணை யம் திமுகவுக்கா நோட்டீஸ் அனுப்பியது? ஓபிஎஸ்சுக்கு தான் அனுப்பியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து நாட்டுக்கு தெரி விப்போம். எப்படி 13 வயதில் இந்தியை எதிர்த்து கருணாநிதி போராட்டம் நடத்தினாரோ, அவரின் வழியில் 14 வயதில் இருந்தே நான் அரசியலில் இருந்து படிப்படியாக வளர்ந்தவன்.
நெருக்கடி நிலையில் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்த வினாடியே என்னை கைது செய்ய போலீஸார் வீட்டுக்கு வந்தனர். தலைவர் என்னை சிறைக்கு வாழ்த்தி வழி அனுப்பினார். என்னை கடவுள் தண்டிப்பார் என பழனிசாமி கூறியுள்ளார். நான் எந்த பாவமும் செய்யவில்லை.
என்னை கடவுள் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாவங்களை செய்தது எல்லாம் நீங்கள். கடவுள் தண்டிக்கிறாரோ, இல்லையோ மக்கள் உங்களை தண்டிப்பார்கள்.
பொள்ளாட்சியில் 250 பெண்கள் பலாத்காரம், தூத்துக்குடி போரா ட்டத்தில் 13 பேர் கொலை, கொடநாடு கொலை, நீட் தேர்வு தற்கொலை போன்ற பாவங்களுக்கு எல்லாம் ஆண்டவன் உங்களுக்கு தண்டனை தருவார்.
கடந்த தேர்தலில் அதிமுக கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பெண்கள் முன்னேற்றத்துக்கான அறிக் கையாக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது. நிறைவேற்றக்கூடிய திட்டங்களைத்தான் அதில் கூறி யுள்ளோம். கரோனா இரண்டாவது அலை வருகிறது என்கிறார்கள். அனைவரும் முகக்கவசம் அணி யுங்கள், தடுப்பூசி செலுத்தி கொள் ளுங்கள்.
காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிவகங் கையில் வேளாண் கல்லூரி தொடங்கப்படும். தேவகோட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கப் படும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago