கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையிலான மக்கள்நலக் கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதனால், தற்போதுதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதியைப் பெற முடியாத பரிதாப நிலையில் அக்கட்சி உள்ளது.
மேலும் திமுக கூட்டணியில் அக்கட்சி தென் மாவட்டங்களில் 4 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் -கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் - தென்காசி, விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் - சிவகங்கை ஆகிய 4 இடங்களை கேட்டுப் பெற அக்கட்சியினர் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பிப். 18-ல்மதுரையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்தி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வரவழைத்து, தமது பலத்தை சூசகமாகக் காட்டியது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 mins ago
தமிழகம்
1 min ago
இந்தியா
20 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
40 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
51 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago