தென் மாவட்டங்களில் 4 தொகுதிகளை குறிவைக்கும் இந்திய கம்யூ.

By சுப.ஜனநாயக செல்வம்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையிலான மக்கள்நலக் கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதனால், தற்போதுதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத் தொகுதியைப் பெற முடியாத பரிதாப நிலையில் அக்கட்சி உள்ளது.

மேலும் திமுக கூட்டணியில் அக்கட்சி தென் மாவட்டங்களில் 4 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் -கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் - தென்காசி, விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் - சிவகங்கை ஆகிய 4 இடங்களை கேட்டுப் பெற அக்கட்சியினர் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பிப். 18-ல்மதுரையில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்தி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வரவழைத்து, தமது பலத்தை சூசகமாகக் காட்டியது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

20 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

51 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்