அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆண்டுக்கான அதிமுக பொதுக்குழு கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் அதிமுக விதிகளில் பொதுக்குழு நடைபெறும்போது திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக சார்பில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இரவு 8.10 மணிக்கு வந்து, ஆலோசனை நடத்தினர். பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும், பிரச்சாரப் பயணம் குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago