சென்னை மகரிஷி வித்யாமந்திர் 455 மாணவர்கள் உயர் சிறப்பு தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 471 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை வழங்கியுள்ளனர்.

அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள் ளனர். இதில் 455 பேர் உயர் சிறப்பு தேர்ச்சி (டிஸ்டிங்ஷன்) பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவர் ஏ.பாலகிருஷ்ணன் 500-க்கு 498 மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றுள்ளார். கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியலில் இவர் 100-க்கு 100 பெற்றுள்ளார். அறிவியல் பிரிவில் ஆர்.ராகுல் ரெட்டி, பி.வத்சன் (496) இரண்டாம் இடத்தையும், நரசிம்மன் காந்த் (495) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

வணிகப் பிரிவில் எம்.யஷ் தோஷி 494 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கணிதம், கணக்குப் பதிவியலில் 100-க்கு 100 பெற்றுள்ளார். வி.நமன் ஜெயின் (490), ஆயுஷ் என்.ஜெயின் (488) ஆகியோர் 2, 3-ம் இடங்களை பிடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்