‘இந்து தமிழ் திசை’ - ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ நடத்தும் பெண்களுக்கான ‘கிச்சன் கார்டன்’ வழிகாட்டி முகாம்: ஆன்லைனில் ஜூலை 18-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், இணையம் வழியே பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ உடன் இணைந்து பெண்களுக்கான ‘கிச்சன் கார்டன்’ எனும் இணையவழி வழிகாட்டி முகாமை வரும் 18, 19, 20 ஆகிய3 நாட்கள் நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சி தினமும் மாலை 6.30 முதல்7.30 மணி வரை நடைபெறும்.

இம்முகாமில், எளிய முறையிலான விவசாயம் அறிமுகம், வீட்டுத்தோட்டம் அமைத்தல், இடம், நேரத்தைத் திறம்பட திட்டமிடுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் தரப்படும். இதில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்கலாம்.

‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ நிறுவனரும் வேளாண் அறிஞருமான டாக்டர் திவ்யா வாசுதேவன் இம்முகாமில் பங்கேற்று, இயற்கை விவசாயம் மற்றும் எளிய முறையில் காய்கறி பயிர் செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறார். இந்த முகாமில் பங்கேற்க செல்போன் இருந்தால் போதும். பங்கேற்க விரும்பும் பெண்கள் ரூ.499/- செலுத்தி https://connect.hindutamil.in/kitchengarden.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

7 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

53 mins ago

தமிழகம்

3 hours ago

மேலும்