ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

By செய்திப்பிரிவு

ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 11) எழுதிய கடிதம்:

"ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி 19.05.2020 அன்று எழுதிய கடிதத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா (INS Jalashwa) கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள்40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை தமிழக அழைத்து வர நடவடிக்கை வேண்டும் என உங்களை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

வர்த்தக உலகம்

26 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்