சட்டவிரோதமாக இந்தியா வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு உயர் நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருஷனன் என்ற சூரன், அருள்வசந்தன், மாறன். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக கூறி வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேரையும் ராமேஸ்வரம் டவுன் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்புவதாக 3 பேரும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் ராபின்சன் ஆட்பேசம் தெரிவித்தார்.
இருப்பினும் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, 3 பேரையும் கீழமை நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். தேவைப்படும் போது விசாரணைக்கு மனுதாரர்கள் ஆஜராக வேண்டும்.
மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்கும் போது தேவையான கூடுதல் நிபந்தனைகளை கீழமை நீதிமன்றம் விதிக்கலாம்.
நிபந்தனைகளை மீறினால் 3 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கீழமை நீதிமன்றத்துக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
9 hours ago
உலகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
கல்வி
12 hours ago