தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இருந்து வருவோரால், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 2 பேர் இறந்துவிட்டனர். 29 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் இன்று மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இருந்து தொடர்ந்து குடும்பம், குடும்பமாக பலர் வந்து கொண்டிருப்பதால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
உலகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
விளையாட்டு
12 hours ago