கரோனா அச்சத்தில் மாலத்தீவில் தவித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 87 பேர் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்.
இவர்கள் தமிழக, கேரள எல்லை பகுதிகளான களியக்காவிளை, கொல்லங்கோடு தங்கும் விடுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா பரவி வருவதை தொடர்ந்து மாலத்தீவில் தவித்த இந்தியர்களை மீட்குமாறு மத்திய அரசிற்கு கோரிக்க விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலத்தீவில் தவித்தவர்கள் இந்திய கடற்படை கப்பல் மூலம் மீட்டு கொச்சி துறைமுகம் அழைத்து வரப்பட்டனர். நேற்று நள்ளிரவில் இருந்து அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 87 பேர் தமிழக, கேரள எல்லை பகுதிகளான களியக்காவிளை, மற்றும் கொல்லங்கோட்டில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிவதற்கு சளி, மற்றும் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து பரிசோதனை கூடத்திற்கு அனுப்பினர்.
இதைப்போல் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் வந்த 60 பேர் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு போலீஸார், மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்தோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள களியக்காவிளை தங்கும் விடுதி முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
48 mins ago
ஜோதிடம்
52 mins ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago