திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அதிமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 150 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.
தமிழக அரசு தன் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என அதிமுக அரசுக்கு ஆதரவாக வாதிட்டிருப்பது வியப்பையும் வேதனையையும் தருகிறது.
அதிமுக அரசின் ஜனநாயக விரோத அணுகுமுறைக்கு மத்திய அரசு ஆதரவளிப்பது கண்டனத்துக்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
59 mins ago
விளையாட்டு
54 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago