144 ஊரடங்கு மீறல்: சென்னையில் ஒரே நாளில் 1,081 வழக்குகள் பதிவு; 626 வாகனங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னையில் 144 ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணிநேரத்தில் 1,081 வழக்குகளும், 626 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் பொருட்கள் கிடைக்கும் நிலையில் தேவையற்ற முறையில் சுற்றக்கூடாது. சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்தார். ஆனாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் வாகனங்களில் சுற்றுவது, கூட்டமாகக் கூடுவது என பொதுமக்களில் சிலர் கரோனா குறித்த பயமின்றித் திரிவதால் போலீஸார் அவர்களைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும், வெளியில் வரக்கூடாது என வீடுகளில் மாநகராட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். போலீஸார் செயலி மூலம் அவர்களைக் கண்காணிக்கின்றனர். இவர்கள் வெளியில் வருவதால் ஒருவேளை கரோனா வைரஸ் பாதிப்பிருந்தால் அவர்கள் மூலம் நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் என்பதால் போலீஸார் அவ்வாறு வெளியில் வருபவர்களைப் பிடித்து 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

சமீபத்தில் பேட்டி அளித்த காவல் ஆணையர் வெளியில் சுற்றுபவர்கள் 1 கிலோ மீட்டருக்குள் தங்களுக்கான உணவுப்பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் எனத்தெரிவித்தார். மீறி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். தினமும் போலீஸார் கைப்பற்றும் வாகனங்கள், போடப்படும் வழக்குகள் எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட விபரம்:

இதுகுறித்து சென்னை போலீஸார் வெளியிட்ட தகவல்:

“கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசி பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144-ன்கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144 தடையுத்தரவு சட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை பெருநகரில் நேற்று (10/4) காலை 6 மணி முதல் இன்று (11/4) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 1,081 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 384 இருசக்கர வாகனங்கள், 10 இலகு ரக வாகனங்கள், 1 கனரக வாகனம் மற்றும் 231 இதர வாகனங்கள் என மொத்தம் 626 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன”.

இவ்வாறு சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

19 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்