சென்னை மணலி நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (48). இவர் கடந்த 20-ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,500 பணம், செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவில் மணலி அருகே பல்ஜிபாளையம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், மாதவரம் பால் பண்ணையை சேர்ந்த அஜித்குமார் (20), சசிகுமார்(22) என்பதும், இவர்கள்தான் இசக்கிமுத்துவிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவலின்படி வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த தமிழ்செல்வன்(21), சுரேஷ்(45), நவீன்(19) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட காளி(21), தினேஷ்(23), சசி(22), அருண்(24) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
28 mins ago
கருத்துப் பேழை
49 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago