விக்கிரவாண்டி
அரசியலை சிலர் தொழில் என நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பல தலைவர்கள் காணாமல் போயுள்ளனர் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சென்னையில் நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினி கலந்து கொண்டார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. பாஜக எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த அதிமுக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளர் ஸ்டாலின்.
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க. மட்டும்தான்.
தமிழக மக்கள் எடைபோட்டு சீர்தூக்கி பார்க்க கூடியவர்கள். வீட்டில் இருந்தபடியே பேட்டி தருபவர் அல்ல எம்ஜிஆர்.மக்களுக்கு சேவை செய்த பிறகே எம்ஜிஆர் பதவிக்கு வந்தார்.
அரசியலை சிலர் தொழில் என நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பல தலைவர்கள் காணாமல் போயுள்ளனர். அரசியலில் உடனே வந்து பதவியில் அமர்ந்து விட முடியாது.
உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம் ஆகும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
1 min ago
க்ரைம்
5 mins ago
இந்தியா
3 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
49 mins ago
தமிழகம்
2 hours ago