நெல்லை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், குற்றாலம், அம்பாச முத்திரம், பாபநாசம், சிவகிரி உள் ளிட்ட பகுதிகளில், நேற்று அதி காலை 4 மணிக்கு மேல் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மித மான மழையும் பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணைப் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதி வான மழை அளவு (மில்லிமிட்டரில்) விவரம் வருமாறு:

அம்பாசமுத்திரம்- 38.20, அடவி நயினார் கோவில் அணை- 37, சிவ கிரி- 34, தென்காசி- 33.40, மணிமுத் தாறு- 32.60, கருப்பாநதி அணை- 29.50, ராதாபுரம்- 25, பாபநாசம் மற்றும் ராமநதி அணையில் தலா 20, ஆய்க்குடி- 19.20, குண்டாறு அணை- 14, நம்பியாறு அணை- 12, திருநெல்வேலி- 10, செங்கோட்டை- 8, சங்கரன்கோவில்- 7, பாளையங் கோட்டை- 6.40, நாங்குநேரி- 6, கட னாநதி அணை- 2, சேரன்மகாதேவி- 1.

அணைகள் நிலவரம்

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணை களுக்கான மொத்த நீர் வரத்து விநா டிக்கு 377 கனஅடியாக இருந்தது. 355 கனஅடி நீர் வெளியேற்றப் பட்டது.

பாபநாசம் அணை நீர்மட் டம் 105.70 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.24 அடியாக வும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 215 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. நீர்மட் டம் அரையடி உயர்ந்து 43.65 அடி யாக இருந்தது.

கடனாநதி அணை நீர்மட்டம் 69 அடி, ராமநதி அணையில் 74, கருப்பாநதி அணையில் 70.21, குண்டாறு அணையில் 36.10, வடக்கு பச்சையாறு 2.75, நம்பி யாறு அணையில் 6.88, கொடுமுடி யாறு அணையில் 32.50 மற்றும் அடவிநயினார் கோவில் அணை யில் நீர்மட்டம் 121.50 அடியாக இருந்தது.

தொடர் மழை

திருநெல்வேலி, பாளையங் கோட்டை, மேலப்பாளையம் பகுதி களில் நேற்றும் காலை 6 மணி தொடங்கி இடியும், மின்னலுமாக இருந்தது. 7 மணி தொடங்கி மழை பெய்தது.

காலை 9 மணி வரை மழை நீடித்தது. பள்ளி, கல்லூரிக் குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிப்பட்டனர். மாவட்டம் முழுவதுமே நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது.

பள்ளியைச் சுற்றிலும் நீர்

பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நுழை வாயில் முதல் வகுப்பறை கள் வரை பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கிக் கிடந்தது. இதனால், மாணவிகள் கடும் அவதிப்பட்டனர். இடி, மின்னல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

குற்றாலத்தில் தடை

குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில், மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

நேற்று பகலிலும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி வரை ஆய்க்குடியில் 88.40 மி.மீ., சங்கரன்கோவிலில் 50 மி.மீ., பாபநாசத்தில் 9 மி.மீ., பாளையங்கோட்டையில் 8.60 மி.மீ., சேரன்மகாதேவியில் 6.40 மி.மீ., செங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 5 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.

மூதாட்டி படுகாயம்

தென்காசியில் நேற்று காலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த ஆறுமுகத்தம்மாள் (75) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

கல்வி

12 hours ago

மேலும்