திருநெல்வேலி
"இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார்" என விமர்சித்துள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அக்.21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உணவுத் துறை அமைச்சர் காமராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடந்த இரு தினங்களாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் நேற்று (அக்.8) மாலை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அரியகுளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தைக் காட்டி தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார். ஆனால், அந்த பலாப்பழம் என்றைக்குமே அவருக்கு கிடைக்காது.
இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என 1 லட்சத்து 11,000 முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார். தமிழக முதல்வர் பழனிசாமியுடன் போட்டி போட முடியாமல் ஸ்டாலின் தத்தளித்து வருகிறார்" எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
39 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago