பொள்ளாச்சி
இளைஞர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் வகையில் திமுக இளைஞரணி செயல்படும் என்று, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச் சியை அடுத்த நெகமத்தில் சிறுகுளத்துக்கு மழைநீர் வரும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத் தார். கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பகுதிக்கு குறைந்தது 10 ஆயிரம் பேர் என்ற இலக்கை வைத்து, 234 தொகுதிகளிலும் 30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, நான் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில், திமுக இளைஞரணி செயல்படும்' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 secs ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago