இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை திமுக இளைஞரணி நிறைவேற்றும்- உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி 

இளைஞர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றும் வகையில் திமுக இளைஞரணி செயல்படும் என்று, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச் சியை அடுத்த நெகமத்தில் சிறுகுளத்துக்கு மழைநீர் வரும் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத் தார். கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பகுதிக்கு குறைந்தது 10 ஆயிரம் பேர் என்ற இலக்கை வைத்து, 234 தொகுதிகளிலும் 30 லட்சம் இளைஞர்களை இளைஞரணியில் உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, நான் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில், திமுக இளைஞரணி செயல்படும்' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 secs ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்