மதுராந்தகம் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பேர் காயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டலம் கிராமத்தில், இன்று (செப்.9) மதுராந்தகத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநர் நிலை தடுமாறி சுமார் 10 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகின்றனர்.

உடனடியாக தண்டலம் கிராமத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தொடர்புகொண்டு வரவழைத்தனர். மேலும் இதில் பயணம் செய்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் பேருந்தின் அடியில் சிக்கினார். பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பேருந்தைத் தூக்கி, அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெயபிரகாஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்