சென்னை
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ''மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 12 அணைகள் நிரம்பியுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அவலாஞ்சி, முக்குருத்தி அப்பர் பவானி உள்ளிட்ட இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மற்றும் கோவையின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகை, கன்னியாகுமரி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம், கூடலூர் பஜாரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
விளையாட்டு
19 mins ago
விளையாட்டு
21 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
12 mins ago
விளையாட்டு
28 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
39 mins ago
இந்தியா
52 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago