மனிதாபிமான அடிப்படையில் விடுவியுங்கள்: இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் ஆட்சியருக்கு மனு

By செய்திப்பிரிவு

படகு பழுதானதால் கச்சத்தீவில் எல்லை தாண்டிய ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக் கோரி அவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆட்சியர் இல்லாததால் அவரது காரியதரிசியிடம் மனுவை அளித்துச் சென்றனர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரது விசைப்படகில் மீனவர்கள் 7 பேர், கடந்த ஜூலை 27-ல் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஜூலை 28-ல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகு பழுதானது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை சிறைபிடித்து, ராமேசுவரத்தைச் சேர்ந்த ஜோசப் பால்ராஜ்(37), பெனிட்டோ (40), நாகராஜ் (45), இன்னாசி (22), சுப்ரமணி(35), முனியசாமி (48), சத்தியசீலன்( 25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 7 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

படகு பழுதான மீனவர்களை மனிதாபினமான அடிப்படையில் திருப்பி அனுப்பி வைக்காமல், கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர். அதனால் அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் திருமுருகன் தலைமையில், ஏழு மீனவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளுடன் வந்து, இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கண்ணபிரானிடம் மனு அளித்தனர்.

- ப.தனபால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

க்ரைம்

16 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்