மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு; நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் மூன்றரை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இணையதளங்களில்...

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சிடெட்) ஜூலை 7-ம் தேதி நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,942 மையங்களில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-1) 13 லட்சத்து 59 ஆயிரத்து 478 பேர் எழு தினர். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-2) 10 லட்சத்து 17 ஆயிரத்து 553 பேர் எழு தினர். தேர்வு முடிவுகள் பின்வரும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

www.ctet.nic.in

www.cbse.nic.in

முதல் தாளில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 658 பேரும் 2-வது தாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 172 பேரும் ஆக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 830 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் டிஜிலாக்கரில் (Digilocker) பதிவேற்றம் செய்யப் படும். அதிலிருந்து சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான லாக்-இன், பாஸ்வேர்டு விவரங்கள் தேர்வர்களின் செல்போன் எண்ணுக்கு எம்எஸ்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சி-டெட் தகுதித்தேர்வின் முடிவு கள் தேர்வு முடிந்த 23 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சிக் கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 90. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) 82 மதிப் பெண் ஆகும். இத்தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர சிடெட் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்