கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க சரத்குமார் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.760 கோடியை உடனடியாக தரவேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ச ர்க்கரை ஆலைகள் ரூ.760 கோடி பாக்கி வைத்துள்ளன. சில தனியார் ஆலைகள் 2 ஆண்டுகளாக பணம் கொடுக்கவில்லை. இந்த தருணத்தில் மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு இந்தியா முழுமைக்கும் சேர்த்து ரூ 6 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.6 ஆயிரம் கோடியிலிருந்து தமிழக விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.760 கோடியையும் முழுமையாக வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

க்ரைம்

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்