கருங்குழி- மதுராந்தகம் இருவழி ரயில் பாதையில் இன்று ஆய்வு: ரயில் சேவையில் மாற்றம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு-விழுப்புரம் மார்க்கத்தில் கருங்குழி- மதுராந்தகம் இடையே அமைக்கப்பட்டுள்ள இருவழி ரயில் பாதையில், பாதுகாப்பு ஆய்வுப் பணி மற்றும் பொறியியல் பணிகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, சென்னை கடற்கரை- மேல்மருவத் தூர்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் களில் (66043/66044) செங்கல்பட்டு- மேல்மரு வத்தூர் இடையேயான சேவை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், மேல்மருவத்தூர்- விழுப்புரம்- மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் (66045/66046) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

ரயில் நேரத்தில் மாற்றம்:

மதுரை- சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636), மதுரையில் காலை 7 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக காலை 9 மணிக்குப் புறப்படும். அதேபோல, சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக மாலை 5.25 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

மேலும், சென்னை எழும்பூர்-மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஒட்டிவாக்கம் ரயில் நிலை யத்தில் 35 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

க்ரைம்

11 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்