அகதிகள் முகாமில் ஐ.ஜி. ஆய்வு

By செய்திப்பிரிவு

இலங்கை அகதிகள் முகாம்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி., சொக்கலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த முகாம்களுக்கு ஐ.ஜி., சொக்கலிங்கம் நேற்று வந்தார். முகாம்வாசிகளிடம் அப்போது பேசிய அவர், ‘வெளிநாடுகளுக்கு, சட்ட விரோதமாக கடல் வழியாக செல்வதால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதால் யாரும் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட வேண்டாம். முகாம்களில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். முகாமுக்கு தொடர்பில்லாதவர்களுக்கு அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

6 mins ago

உலகம்

13 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்