பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சேலம் எருமாபாளையத்தில் நேற்று இரவு பாமக அரசியல் மாநாடு நடைபெற்றது. பொதுக்குழு கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அன்புமணி பேசியதாவது:

வரும் 2016 சட்டமன்றத் தேர்த லில் பாமக முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவோம். சேவை பெறும் உரிமைச் சட்டம், அனைவருக்கும் இலவச கல்வி, ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கை, ஒரு நிமிடம்கூட மின் நிறுத்தம் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

தமிழக பட்ஜெட்டில் 40 சதவீதம் இலவச திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. இதனால் ரூ.15 ஆயிரம் கோடி கடனுக்கு வட்டியாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் மின் உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கும். தற்போதைய தமிழக முதல்வர் செயல்படாத முதல்வராக உள்ளார்.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்