காசிமேடு இளம்பெண் புகார்: பாதிரியார் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

இளம்பெண் கொடுத்த பலாத்கார புகாரின் பேரில் பாதிரியார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் ஜேக்கப் ஆல்பர்ட் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு அதில் கோரியிருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் இந்த வழக்கை விசாரித்தார்.

‘‘மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் மீது காசிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணைக்காக மனுதாரர் வரும் 18-ம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். மனுதாரரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு, சாட்சிகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

56 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்