குடும்ப அட்டை குறைதீர் முகாம்: சென்னையில் நாளை நடக்கிறது

By செய்திப்பிரிவு

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்த குறைதீர்ப்பு கூட்டம் சென்னையில் நாளை (14ம் தேதி) நடக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக சென்னையில் உள்ள 16 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குறை தீர்ப்பு கூட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும். அந்தந்த பகுதியை சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றில் குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

கீழ்கண்ட பகுதிகளில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

சிதம்பரனார் -சென்னை நடுநிலைப்பள்ளி, வாத்தியார் கந்தப்ப தெரு,சூளை (சூளை தபால் நிலையம் அருகில்). ராயபுரம் - சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எண் 212, சஞ்சீவராயன் கோயில் தெரு. பெரம்பூர் - சென்னை நடுநிலைப்பள்ளி, எண்22/26 செய்யூர் பார்த்தசாரதி தெரு. அண்ணாநகர் - சென்னை நடுநிலைப்பள்ளி,எண் 286 ஈ.வே.ரா. பொரியார் நெடுஞ்சாலை அமைந்தகரை. அம்பத்தூர் - பெருந்தலைவர் காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,பூங்கா தெரு, வடக்கு வெங்கடாபுரம். வில்லிவாக்கம் - கொளத்தூர் டேனியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எண் 55/10,5வது குறுக்கு தெரு, கம்பர் நகர். திருவொற்றியூர் - சென்னை மாநகராட்சி துவக்க பள்ளி, சிபிசிஎல் நகர்,ஆமுல்லைவாயில்,மணலி.

ஆவடி - மோரே ஊராட்சி சமுதாயகூடம் வீராபுரம்,3-வது பட்டாலியன் காவாத்து மையம். தி.நகர் - அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி,பி.வி. ராஜமன்னார் சாலை, விஜயராகவபுரம், சாலிகிராமம். மயிலாப்பூர் - சென்னை மாநகராட்சி 152-வது வார்டு அலுவலகம்,8-வது குறுக்கு தெரு,சாஸ்திரி நகர். அடையாறு - பரங்கிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,37 காலேஜ் ரோடு. பழவந்தாங்கல் - தாம்பரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை. அனகாபுத்தூர் - சைதாப்பேட்டை அட்வென்ட் கிறிஸ்துவ துவக்க பள்ளி,காந்திரோடு. வேளச்சேரி - ஆயிரம்விளக்கு சென்னை உயர்நிலைப் பள்ளி,4-வது ஸ்டரான்ஸ் ரோடு,பட்டாளம்.

சேப்பாக்கம் - சென்னை நடுநிலைப் பள்ளி,51, பங்காரு தெரு(சீனிவாசா ஹோட்டல் அருகில்). சோழிங்கநல்லூர் - சென்னை மாநகராட்சி 14-வது மண்டல அலுவலகம், மடிப்பாக்கம்(மடிப்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் அருகில்).

மேற்குறிப்பிட்ட இடங்களில் குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

50 mins ago

க்ரைம்

54 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்