ஆளுநரிடம் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு

By செய்திப்பிரிவு

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது என்று மாணவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது பாடையில் ஒரு மாணவர் இறந்தவர் போல படுத்துக்கொள்ள அவரைச் சுற்றி 6 மாணவர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர். பின்பு, அந்த மாணவரை கல்லூரி வளாகம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தமிழக அரசு இறந்துவிட்டது என மாணவர்கள் ஒப்பாரிவைத்தனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்துள்ளனர். அதில், ''சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

வாழ்வியல்

13 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்