ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
மண்டபத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் குமரேசன் என்பவரது விசைப்படகு பழுதாகி கச்சத்தீவு அருகே நின்றது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப் படகையும், படகில் இருந்த பூமிநாதன், ஈஸ்வரன், முனியசாமி, பாலகிருஷ்ணன் ஆகிய 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர். மேலும் பழுதடைந்த விசைப்படகை மீட்கச் சென்ற நாகராஜ் என்பவரது விசைப் படகை யும் அதிலிருந்த பாலு, ரவி, முருகேசன், கோவிந்தராஜ் ஆகிய 4 மீனவர்கள் என 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின் நெடுந்தீவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 8 தமிழக மீனவர்களும் இன்று யாழ்ப் பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே யாழ்ப்பாணம் சிறையில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்கள் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
தமிழகம்
30 mins ago
வணிகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago