காமராஜரை இழிவுபடுத்திப் பேசியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு நாடார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த அமைப்புகள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ‘1967-ல் காமராஜருக்கு ஏற்பட்ட கதிதான் இந்தத் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கும் வரும்’ என்று கூறியுள்ளார். காமராஜர் மறைந்து 40 ஆண்டுகளான நிலையிலும் கோடிக்கணக்கான தொண்டர்களின் நெஞ்சங்களில் இன்றும் வீற்றிருக்கிறார். அவர் உருவாக்கித் தந்த திட்டங்கள் இன்றளவும் இந்தியாவை வளமாக்கி, தேசிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஊழலோ, நிர்வாகச் சீர்கேடுகளோ, அரசியல் குறுக்கீடுகளோ இருந்ததில்லை. இப்படியிருக்க காமராஜரையும், திராவிடக் கட்சிகளையும் ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டனத்துக் குரியது. எனவே, நல்லகண்ணு, தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
54 mins ago
ஜோதிடம்
59 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago