தூத்துக்குடி அருகே குளத்தூரில் காதல் திருமணம் செய்த தம்பதி கொலை: பெண்ணின் தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூ ரில் காதல் திருமணம் செய்த இளம் பெண், கணவருடன் கொலை செய்யப்பட்டார். அப்பெண்ணின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

குளத்தூர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த திருமணி மகன் சோலைராஜா(24). குளத்தூர் அருகே பல்லாகுளத்தை சேர்ந்த அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி(21). தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த இவர்கள் இருவரும், அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற் பட்டு, காதலித்தனர்.

இவர்களது காதலுக்கு ஜோதி யின் பெற்றோர் மற்றும் குடும்பத் தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் தந்தை பெரி யார் நகரில் வசித்து வந்தனர். ஜோதி 2 மாதம் கர்ப்பமாக இருந் தார். நேற்று அதிகாலையில் மின் தடை ஏற்பட்டதால் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வெளியே தூங்கியுள்ளனர். நேற்று காலை சோலைராஜா வீட்டுக்கு அவரது தாய் முத்து சென்றபோது, சோலைராஜாவும், ஜோதியும் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.

எஸ்பி அருண் பாலகோபாலன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, நாலாட்டின்புதூர் அருகே வாகன சோதனையில் ஈடு பட்டு இருந்த போலீஸார், ஜோதி யின் தந்தை அழகரை பிடித்து விசா ரித்தனர். கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

33 mins ago

சினிமா

45 mins ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்