வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை தமிழகம், புதுவையில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேர நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 90 மிமீ மழை பெய்துள்ளது. ஒகேனக்கல், ஊத்தங்கரையில் 80 மிமீ மழையும், ஓசூரில் 70 மிமீ மழையும் பெய்துள்ளது.
புதன்கிழமை மாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
வாழ்வியல்
8 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago