அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர் பணிக்கான நேர்காணல் வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர் பணிக்கான நேர்காணல் ஜூன் 22-ம் தேதி காலை 11 மணிக்கு எண்-2, சிவஞானம் சாலை, தி.நகர் என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நேர்காணலில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மக்கள் தொகை 5 ஆயிரத்துக்கும் குறை வாக உள்ள பகுதியில் வசிப்ப வர்கள் எனில் 10-ம் வகுப்பு தேர்ச்சி யும், மக்கள் தொகை 5 ஆயிரத் துக்கும் அதிகமாக உள்ள பகுதி யில் வசிப்பவர்கள் எனில் 12-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
வேலையில்லா, சுய தொழில் புரியும் இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு குழுமத்தின் முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர் கள், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத்தினர் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். வயது வரம்பு 18-ல் இருந்து 60 வரை.
காப்பீட்டு விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் சுய விவரக் குறிப்பு (பயோ-டேட்டா), வயதுச் சான்று, தேவையான கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களை உடன் எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 mins ago
இந்தியா
10 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago