குதிரை பேர வீடியோ விவகாரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார்.
சென்னை ராஜ்பவனில் சனிக்கிழமை மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். உடன் துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் இருந்தனர்.
அப்போது எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கேட்டும், சபாநாயகர் மறுத்துவிட்டார் என்பதையும் ஸ்டாலின் ஆளுநரிடம் தெரிவித்தார். புகாருக்கு ஆதாரமாக ஒரு சி.டி.யை ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்துள்ளார்.
மேலும், குதிரை பேர விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளித்தார்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
கல்வி
11 hours ago