சென்னையில் தானியங்கி அஞ்சல் பிரிப்பு மையம்

By செய்திப்பிரிவு

அனைத்து வகையான கடிதங்களை யும் தானியங்கி முறையில் பிரிக்க, மேம்படுத்தப்பட்ட கடிதப் பிரிப்பு இயந்திரம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது என்று தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தற்போது 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ.261 கோடி மதிப்பீட்டில் மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் முழுமையான ‘தானியங்கி அஞ்சல் பிரிப்பு மையங்கள்’ நிறுவுவதற்கான திட்டம் வகுத்துள்ளது.

இதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட அனைத்து வகை கடிதப் பிரிப்பு இயந்திரங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட கடிதப் பிரிப்பு இயந்திரம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்