தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமையன்று கவர்னரின் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை வரும் 3-ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அது குறித்து பேரவைத் தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு (சௌ.வே.வரதராஜன், ந.பழனிவேல், எஸ்.ரெத்தினராஜ், ஆ.கருப்பையா, சி.துரைராஜ்) 31-ம் தேதி (வெள்ளி) இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் விவாதம் தொடர்கிறது. ஞாயிறு விடுமுறை.
பிப்ரவரி 3-ம் தேதி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும். அன்றைய தினம், சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
8 mins ago
தமிழகம்
24 mins ago
கருத்துப் பேழை
46 mins ago
விளையாட்டு
50 mins ago
இந்தியா
54 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago