பிப்.3 வரை பேரவை கூட்டம்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமையன்று கவர்னரின் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை வரும் 3-ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அது குறித்து பேரவைத் தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு (சௌ.வே.வரதராஜன், ந.பழனிவேல், எஸ்.ரெத்தினராஜ், ஆ.கருப்பையா, சி.துரைராஜ்) 31-ம் தேதி (வெள்ளி) இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் விவாதம் தொடர்கிறது. ஞாயிறு விடுமுறை.

பிப்ரவரி 3-ம் தேதி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும். அன்றைய தினம், சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 mins ago

தமிழகம்

24 mins ago

கருத்துப் பேழை

46 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

54 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்