மனசாட்சியை தொலைத்துவிட்டு பணத்துக்காக ஜனநாயகத்தை எம்எல்ஏக்கள் அடமானம் வைத்துள்ளனர் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனி்சாமி அரசு வெற்றி பெற்றிருக்காது. பேரவை உறுப்பினர்கள் உயிருக்கு பயந்து, குடும்ப நலனை முன்னிறுத்தி, தொகுதி மக்கள் நலனை மறந்து, மனசாட்சியை தொலைத்து, பணத் துக்காக ஜனநாயகத்தை அடமானம் வைத்துள்ளனர். அவர்களை தொகுதி மக்கள் நிச்சயம் கேள்வி கேட்பார்கள்.
சட்டப்பேரவைத் தலைவர் நாடகம் நடத்தி திமுக உறுப்பினர்களை வெளியேற்றியுள்ளார். அவர் ஆளும் கட்சி தலைவர்போல் செயல்பட்டி ருக்கிறார். வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மனோபாவம் மாறாத வரை நேர்மை யான அரசியலையும், மக்களுக்கான அரசையும் ஏற்படுத்த முடியாது. ஊழலை விரட்ட இளைஞர்கள், மாண வர்கள், பெண்கள் ஜல்லிக்கட்டு காளைகள்போல் சீறிக் கிளம்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
க்ரைம்
21 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
59 mins ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago